தூத்துக்குடியில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்: தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு!

சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் சிறையில் மரணம் அடைந்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) ஒருநாள் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் சிறையில் மரணம் அடைந்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) ஒருநாள் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தை அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் கண்டித்து வருகின்றனர்.

இதனிடையே, இருவரும் வணிகர்கள் என்பதால் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் சங்கம் களத்தில் இறங்கியுள்ளன. 

இந்த நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் சிறையில் மரணம் அடைந்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (26-6-2020) ஒருநாள் கடையடைப்பும், அனைத்து வணிகர் இல்லங்களில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி பிராத்திக்குமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 30ம் தேதி தமிழக அனைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் அறப்போராட்ட நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை ஒரு கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...