வால்பாறையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

வால்பாறை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வால்பாறையில், கொரோனா பரவலை தடுக்க அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.


வால்பாறை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வால்பாறையில், கொரோனா பரவலை தடுக்க அனைத்து  அரசு  அலுவலகங்களுக்கும் தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக  பரவிவருகிறது.  இந்நிலையில் வால்பாறை பகுதியை கொரோனா  இல்லாத பகுதியாக்க வேண்டும் என்பதற்காக,  சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 



இந்த விழிப்புணர்வு பிரச்சாரக்கூட்டத்தில், சிறுகுன்றா தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலை பகுதிகளில் உள்ள தொழிலாளர்களிடையே முகக் கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுவது குறித்து வலியுறுத்தப்பட்டது.

மேலும், தனது சொந்த செலவில்  வால்பாறை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தானியங்கி கிருமி நாசினி வழங்கும் இயந்திரத்தை  வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு , தொழிற்சங்க தலைவரும் தமிழ்நாடு தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினருமான வால்பாறை அமீது ,  வாசு நகரச் செயலாளர் மயில் கணேசன் ,பொன் கணேஷ் சலாவுதீன்  , கட்சி நிர்வாகிகள் மருத்துவர்கள் ,செவிலியர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...