தமிழக முதலமைச்சர் நாளை கோவை வருகை; பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்

கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை, ஜூன் 25 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை, ஜூன் 25 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதனையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நாளை கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அத்திக்கடவு அவிநாசி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

மேலும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

முதல் தள கூட்ட அரங்கில் தொழில் முதலீட்டாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, உக்கடம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு திட்டத்தை ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாலை வழியாக சேலம் செல்கிறார். இதில் மாற்றம் இருக்கக்கூடும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக முதலமைச்சர் கோவை வருகையையொட்டி காவல்துறை தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...