கோவை: கோவை வெரைட்டி ஹால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளி நடிகரின் மரணத்தின் வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: தாராபுரம் நகராட்சி அலுவலக ஊழியர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்காலிகமாக நகராட்சி அலுவலகத்தை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் அந்த பெண் ஊழியர் மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும் நகராட்சி அலுவலக பெண் ஊழியருடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, 5 பேரும் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நகராட்சி அலுவலகத்தை மூட உத்தரவிட்ட அதிகாரிகள், மற்ற நகராட்சி அலுவலக ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது நகராட்சி அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று இரவிலிருந்து நடைப்பெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு அலுவலகம் மூடப்பட்டது, இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் அந்த பெண் ஊழியர் மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும் நகராட்சி அலுவலக பெண் ஊழியருடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, 5 பேரும் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நகராட்சி அலுவலகத்தை மூட உத்தரவிட்ட அதிகாரிகள், மற்ற நகராட்சி அலுவலக ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது நகராட்சி அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று இரவிலிருந்து நடைப்பெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு அலுவலகம் மூடப்பட்டது, இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.