சாத்தான் குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் - கோவை மாவட்ட வணிகர் சங்கம்

கோவை: சாத்தான் குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என கோவை மாவட்ட வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: சாத்தான் குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என கோவை மாவட்ட வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை சிவானந்தா காலனியில் அமைந்துள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மண்டல தலைவர் சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது பேசிய அவர், தூத்துக்குடி சாத்தன்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர்களான தந்தை, மகன் இருவரும் சிறையில் உயிரிழந்த சம்பவம் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்தார். போலீசார் விசாரணை என்ற பெயரில் இருவரையும் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் தான் இந்த மரணம் ஏற்பட்டதாகவும் மனிதாபிமானமற்ற முறையில் போலீசார் நடந்து கொண்டதாக தெரிவித்த அவர், போலீசாரின் தாக்குதல் காரணமாகவே சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் மரணமடைந்தனர் என குற்றம் சாட்டினார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும் எனவும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோல, நாளைய தினம் நடைபெறவுள்ள உடற்கூறு ஆய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகும் பட்சத்தில் கொலை குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என டி.ஜி.பி கூறி உள்ளதாகவும் உடற்கூறு ஆய்வு செய்யும் போது அரசு மருத்துவர்களுடன் வணிக தரப்பினர் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், வணிகர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...