கோவை: கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் மனமுடைந்த கணவன் வீட்டின் முன் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் மனமுடைந்த கணவன் வீட்டின் முன் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சோமையம்பாளையம் பகுதி ராமசாமி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ரகுபதி (21). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சம்பள பணம் முழுவதும் மது அருந்தியே செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரது மனைவி தனது உறவினர் ஈம காரியத்திற்கு பணம் கேட்டு உள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறிய ரகுபதி மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கணவனை காணவில்லை என தேடிய மனைவி தன் கணவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவரது தாய் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்விற்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சோமையம்பாளையம் பகுதி ராமசாமி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ரகுபதி (21). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சம்பள பணம் முழுவதும் மது அருந்தியே செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரது மனைவி தனது உறவினர் ஈம காரியத்திற்கு பணம் கேட்டு உள்ளார். தன்னிடம் பணம் இல்லை என கூறிய ரகுபதி மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கணவனை காணவில்லை என தேடிய மனைவி தன் கணவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவரது தாய் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்விற்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.