கோவை: கோவையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சித்ரா பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த எஸ். லிலியன் ஜெப் (21). நேற்று சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சரவணம்பட்டி போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த லிலியன் ஜெப்பை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவலர்கள் அவரை சோதனையிட்ட போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த பகுதியில் அதிக அளவில் கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை சித்ரா பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த எஸ். லிலியன் ஜெப் (21). நேற்று சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சரவணம்பட்டி போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த லிலியன் ஜெப்பை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவலர்கள் அவரை சோதனையிட்ட போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த பகுதியில் அதிக அளவில் கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.