கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியரின் உடல் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியரின் உடல் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் சேவையில் அவசர மருத்துவராக (ஈ.எம்.டி) பணிபுரிந்து வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயது நபர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலம் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் அவர் இறுதி சடங்குகள் இன்று காலை கோவையில் நடைப்பெற்றது.
பெற்றோர் முன்னிலையில் கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள மின் மயானத்தில் சுகாதாரத்துறையினரால் பாதுகாப்பாக அடக்கம் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான, இவருக்கு 4 சகோதரிகள் உள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஒரே ஆண் வாரிசையும் பறிகொடுத்த தாய் கதறி அழுத காட்சிகள் காண்போரைக் கண் கலங்கச் செய்தது.
கடந்த சில நாட்களாக, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் சேவையில் அவசர மருத்துவராக (ஈ.எம்.டி) பணிபுரிந்து வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 வயது நபர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலம் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் அவர் இறுதி சடங்குகள் இன்று காலை கோவையில் நடைப்பெற்றது.
பெற்றோர் முன்னிலையில் கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள மின் மயானத்தில் சுகாதாரத்துறையினரால் பாதுகாப்பாக அடக்கம் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான, இவருக்கு 4 சகோதரிகள் உள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஒரே ஆண் வாரிசையும் பறிகொடுத்த தாய் கதறி அழுத காட்சிகள் காண்போரைக் கண் கலங்கச் செய்தது.