சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை மூன்று நாட்களில் குணப்படுத்த முடியும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றை மூன்று நாட்களில் குணப்படுத்த முடியும் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 160 பேருக்கு குறைந்த நாட்களில் சித்த மருத்துவத்தின் மூலம், குணம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மாநகரப்பகுதியில் உள்ள அனைத்து கோவிட் கேர் மையங்களையும், தங்களுக்கு ஒப்படைத்தால், தங்களது மருத்துவர்கள், சிகிச்சையளிக்க தயாராக இருப்பதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (National Institute of Siddha)தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தேசிய சித்த மையம் வருகிறது. இந்த மருத்துவத்தின் மூலம், சென்னையில் உள்ள 160 நோயாளிகளுக்கு 3 நாட்களில் சிகிச்சையின் மூலம் குணமாக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த நாட்களிலேயே, கொரோனா பரவலை பெருமளவு குறைத்து, பல்வேறு பகுதிகளை பாதுகாப்பான பகுதிகளாக மாற்றியுள்ளது. கொரோனா தொற்றுக்கு, சித்த மருத்துவத்தின் மூலம் எளிய வகையில் தீர்வு கிடைப்பதால், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கொரோனா மையங்களையும் தங்களிடம் ஒப்படைத்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தங்களது சித்த மருத்துவர்கள் தயாராக இருப்பதாக, தேசிய சித்த மருத்துவ நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் பாதிப்பிற்கேற்ப 3 வகையான சித்த மருந்துகள் தங்களிடம் தற்போது கைவசம் உள்ளதாகவும், மேலும் இந்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தற்போது தங்களது இந்த மருந்துகளே, கொரோனா தொற்று பாதிப்பை எளிதில் குணமாக்கும் திறன் கொண்டவையாக இருப்பதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளுடன் ஒப்பிடுகையில், சித்த மருந்துகள் விலை குறைவாக உள்ளதோடு மட்டுமல்லாது. அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் உள்ள கொரோனா மையங்களை தங்களது கட்டுப்பாட்டிற்கு தந்தால், தாங்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 160 பேருக்கு குறைந்த நாட்களில் சித்த மருத்துவத்தின் மூலம், குணம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மாநகரப்பகுதியில் உள்ள அனைத்து கோவிட் கேர் மையங்களையும், தங்களுக்கு ஒப்படைத்தால், தங்களது மருத்துவர்கள், சிகிச்சையளிக்க தயாராக இருப்பதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (National Institute of Siddha)தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தேசிய சித்த மையம் வருகிறது. இந்த மருத்துவத்தின் மூலம், சென்னையில் உள்ள 160 நோயாளிகளுக்கு 3 நாட்களில் சிகிச்சையின் மூலம் குணமாக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த நாட்களிலேயே, கொரோனா பரவலை பெருமளவு குறைத்து, பல்வேறு பகுதிகளை பாதுகாப்பான பகுதிகளாக மாற்றியுள்ளது. கொரோனா தொற்றுக்கு, சித்த மருத்துவத்தின் மூலம் எளிய வகையில் தீர்வு கிடைப்பதால், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கொரோனா மையங்களையும் தங்களிடம் ஒப்படைத்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தங்களது சித்த மருத்துவர்கள் தயாராக இருப்பதாக, தேசிய சித்த மருத்துவ நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் பாதிப்பிற்கேற்ப 3 வகையான சித்த மருந்துகள் தங்களிடம் தற்போது கைவசம் உள்ளதாகவும், மேலும் இந்த மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தற்போது தங்களது இந்த மருந்துகளே, கொரோனா தொற்று பாதிப்பை எளிதில் குணமாக்கும் திறன் கொண்டவையாக இருப்பதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளுடன் ஒப்பிடுகையில், சித்த மருந்துகள் விலை குறைவாக உள்ளதோடு மட்டுமல்லாது. அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் உள்ள கொரோனா மையங்களை தங்களது கட்டுப்பாட்டிற்கு தந்தால், தாங்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.