கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை இராமநாதபுரம் அருகே நேற்று இரவு ஒருவர் கஞ்சா விற்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அபிலாஷ் என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை சோதனையிட்ட போது அவரிடம் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளிகள் அதிகம் உள்ள ராமநாதபுரம் பகுதியில் இளைஞர் அபிலாஷ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளதால் அவருக்கு எங்கிருந்து கிடைக்கப் பெறுகிறது, வேறு யாரேனும் இவருடன் கூட்டாளிகளாக உள்ளனரா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சமீப காலமாக கோவை பகுதியில் நூதன முறையில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி மாணவர்கள், பெண்கள், ஆண்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை இராமநாதபுரம் அருகே நேற்று இரவு ஒருவர் கஞ்சா விற்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அபிலாஷ் என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை சோதனையிட்ட போது அவரிடம் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளிகள் அதிகம் உள்ள ராமநாதபுரம் பகுதியில் இளைஞர் அபிலாஷ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளதால் அவருக்கு எங்கிருந்து கிடைக்கப் பெறுகிறது, வேறு யாரேனும் இவருடன் கூட்டாளிகளாக உள்ளனரா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சமீப காலமாக கோவை பகுதியில் நூதன முறையில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி மாணவர்கள், பெண்கள், ஆண்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.