போலி இ-பாஸ் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல மாநிலங்களை கடந்து வந்த சொகுசு பேருந்து கோவை கருமத்தம்பட்டி சோதனை சாவடியில் சிக்கியது!

கோவை: போலி இ-பாஸ் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல மாநிலங்களை கடந்து தமிழகம் வந்த சொகுசு பேருந்து கோவை கருமத்தம்பட்டி சோதனை சாவடி வாகன சோதனையில் சிக்கியது.


கோவை: போலி இ-பாஸ் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல மாநிலங்களை கடந்து தமிழகம் வந்த சொகுசு பேருந்து கோவை கருமத்தம்பட்டி சோதனை சாவடி வாகன சோதனையில் சிக்கியது. 

போலி இ பாஸ் பயன்படுத்தி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று அதிகாலை கருமத்தம்பட்டி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவை வந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். 

அப்போது, அவர்கள் பயன்படுத்தி வந்த இ- பாஸ் போலியானது என்பது தெரியவந்தது. சுக்காராம் என்ற பெயரில் ஏற்கனவே பெறப்பட்டிருந்த இ பாஸ் மாற்றி அதை வாகனத்தில் ஒட்டியபடி பயணம் செய்து இருப்பதும் தெரியவந்தது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் இந்த போலி பாஸ் மூலம் பயணித்து வந்து இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பேருந்தில் பயணித்த 30 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பேருந்தை பறிமுதல் செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலியாக இ பாஸ் தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...