கோவை: பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனமான டி மார்ட் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு கிளை போத்தனூர் மைல்கல்ல்லில் அமைந்துள்ளது. இங்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றாத காரணமாக அங்கு ஆய்வு மேற்கொண்ட மதுக்கரை வட்டாச்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகளால் அங்காடி சீல் வைத்தனர்.
கோவை: பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனமான டி மார்ட் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு கிளை போத்தனூர் மைல்கல்ல்லில் அமைந்துள்ளது. இங்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றாத காரணமாக அங்கு ஆய்வு மேற்கொண்ட மதுக்கரை வட்டாச்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகளால் அங்காடி சீல் வைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “கடையின் உள்ளே சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனவும் முககவசம் அணியாமல் அரசு விதிமுறைகளை மீறிய காரணங்களால் சீல் வைக்கபட்டதாக தெரிவித்தனர். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயர்படிப்பிற்கு மதுரை சென்றபோது கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் எங்கெங்கு சென்று வந்தார் என விசாரித்துபோது போத்தனூர் பகுதியில் உள்ள டி மார்ட் பல்பொருள் அங்காடிக்கு மூன்று முறை சென்று வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் அப்போதே விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யபட்டதாகவும் அதனை கண்டு கொள்ளாமல் வியாபார நோக்கில் செயல்பட்ட காரணமாக இன்று சீல் வைக்கபட்டதாக தெரிவித்தனர்.
பொருட்கள் வாங்க வந்தவர்கள் வெளியே அனுப்பட்டு மதுக்கரை வட்டாட்சியர் சரண்யா முன்னிலையில் போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஷ்வரன் மற்றும் அதிகாரிகள் பல்பொருள் அங்காடிக்கு சீல் வைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “கடையின் உள்ளே சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனவும் முககவசம் அணியாமல் அரசு விதிமுறைகளை மீறிய காரணங்களால் சீல் வைக்கபட்டதாக தெரிவித்தனர். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயர்படிப்பிற்கு மதுரை சென்றபோது கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் எங்கெங்கு சென்று வந்தார் என விசாரித்துபோது போத்தனூர் பகுதியில் உள்ள டி மார்ட் பல்பொருள் அங்காடிக்கு மூன்று முறை சென்று வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் அப்போதே விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யபட்டதாகவும் அதனை கண்டு கொள்ளாமல் வியாபார நோக்கில் செயல்பட்ட காரணமாக இன்று சீல் வைக்கபட்டதாக தெரிவித்தனர்.
பொருட்கள் வாங்க வந்தவர்கள் வெளியே அனுப்பட்டு மதுக்கரை வட்டாட்சியர் சரண்யா முன்னிலையில் போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஷ்வரன் மற்றும் அதிகாரிகள் பல்பொருள் அங்காடிக்கு சீல் வைத்தனர்.