கேரளா மாநிலம் அட்டபாடி பகுதியில் உள்ள தங்கள் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய அனுமதி வேண்டி விவசாயிகள் மனு

கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள தமிழக விவசாயிகள் கேரளாவில் உள்ள அட்டப்பாடி, சோலையூர் கோட்டத்துறை ஆகிய கிராமங்களில் விவசாயம் செய்து வருகின்றன.

கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள தமிழக விவசாயிகள் கேரளாவில் உள்ள அட்டப்பாடி, சோலையூர் கோட்டத்துறை ஆகிய கிராமங்களில் விவசாயம் செய்து வருகின்றன.

குறிப்பாக, தென்னை, வாழை, மக்காச்சோளம், திணை வகைகள் காய்கறி போன்றவற்றை பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாததிற்க்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலாக்கப்பட்ட நிலையில், மாநில எல்லைக மூடப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இ-பாஸ் இல்லாமல் யாரும் மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் தடாகம் போன்ற கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் கேரளாவில் உள்ள அவர்களது நிலத்திற்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கேரள எல்லைக்குள் சென்று விவசாயம் செய்து வர அனுமதி ஏற்பாடு செய்து தர வேண்டி ஜாதி மத அரசியல் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஜாதி மத அரசியல் சார்பற்ற விவசாயிகள் சங்க மகளிர் அணி, மாநில இணை செயலாளர் மகாலட்சுமி கூறுகையில்:-

தங்களது விவசாய நிலம் கேரள எல்லைக்குள் இருப்பதால் அங்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் அங்கு பயிரிட்டுள்ள பயிர்கள் காய்கறிகள் போன்றவை வீணாவதாக தெரிவித்தார்.

மேலும், அரசு விதிமுறைகளை பின்பற்றி அங்கு சென்று விவசாயம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தக்க அனுமதி பெற்று தர வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...