கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளியூர் மற்றும் வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் பகுதியில் புதிதாக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து யாரேனும் வந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 9894181212 என்ற எண்ணில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலம் சென்று திரும்பி வந்தவர்கள் குறித்து 1077 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலக எண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளியூர் மற்றும் வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் பகுதியில் புதிதாக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து யாரேனும் வந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 9894181212 என்ற எண்ணில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலம் சென்று திரும்பி வந்தவர்கள் குறித்து 1077 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலக எண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.