கோவை: கோவையில் அதிகளவில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் அதிகளவில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு, பவானி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணி குடிநீர் கோவை மாநகராட்சி வார்டுகளுக்கும், வழியோர கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக சிறுவாணியில் தற்போது நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
மேலும் சத்தியமங்கலம் சாலையில் உள்ள ராட்சத நீர்த்தேக்க தொட்டியில் பில்லூர் குடிநீர் சேகரிக்கப்பட்டு பிரதானக்குழாய்கள் மூலம் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யும் வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆழியாறு, பவானி ஆற்றுப் படுகையில் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களில் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில பகுதிகளுக்கு சரியான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், கோவையில் பகுதியில் 4-5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 8-10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் பல்வேறு இடங்களில் கடந்த 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கோவையில் அதிகளவில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு, பவானி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணி குடிநீர் கோவை மாநகராட்சி வார்டுகளுக்கும், வழியோர கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக சிறுவாணியில் தற்போது நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
மேலும் சத்தியமங்கலம் சாலையில் உள்ள ராட்சத நீர்த்தேக்க தொட்டியில் பில்லூர் குடிநீர் சேகரிக்கப்பட்டு பிரதானக்குழாய்கள் மூலம் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யும் வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆழியாறு, பவானி ஆற்றுப் படுகையில் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களில் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில பகுதிகளுக்கு சரியான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், கோவையில் பகுதியில் 4-5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 8-10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் பல்வேறு இடங்களில் கடந்த 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கோவையில் அதிகளவில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.