கோவை: சென்னையில் இருந்து 30 ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து அரசு வழிகாட்டுதலை மீறி விற்பனையில் ஈடுபட்ட GRT நகைக்கடை மீது வழக்குப்பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை: சென்னையில் இருந்து 30 ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து அரசு வழிகாட்டுதலை மீறி விற்பனையில் ஈடுபட்ட GRT நகைக்கடை மீது வழக்குப்பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அங்கு பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து நகை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, நகைக்கடைக்கு வந்த போலீசார், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சென்னையில் பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள ஜிஆர்டி நகைக்கடையில் பணி புரிவதற்காக அனுமதியின்றி அழைத்து வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, அந்நிறுவனத்தின் 3 தளங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட 30 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு நாளை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 30 ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், அரசு வழிகாட்டுதலை மீறி அதிகமான பணியாளர்களை கொண்டு இயங்கியதாக GRT நகைக்கடை மேலாளர் மற்றும் 39 ஊழியர்கள் மீது காட்டூர் காவல் நிலையத்தில் 188, 269, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அங்கு பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களை கோவைக்கு அழைத்து வந்து நகை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, நகைக்கடைக்கு வந்த போலீசார், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சென்னையில் பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள ஜிஆர்டி நகைக்கடையில் பணி புரிவதற்காக அனுமதியின்றி அழைத்து வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, அந்நிறுவனத்தின் 3 தளங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட 30 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு நாளை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 30 ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், அரசு வழிகாட்டுதலை மீறி அதிகமான பணியாளர்களை கொண்டு இயங்கியதாக GRT நகைக்கடை மேலாளர் மற்றும் 39 ஊழியர்கள் மீது காட்டூர் காவல் நிலையத்தில் 188, 269, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.