கோவை: கோவையில் வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகமாக பரவி வரும் சூழலில் பாதுகாப்பு கருதி வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தொற்று அதிகரித்து வருவதால் பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பெரியகடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி, தாமஸ் வீதி, வைசியாள் வீதி, தேர்முட்டி ஆகிய பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாகவும் இவை அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரையிலே செயல்படும் என்றார். இதில் கோயமுத்தூர் மளிகை வியாபாரிகள் சங்கம், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் (கடை வீதி கிளை), கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் டிஸ்டிரிபூயுட்டர்ஸ் அசோசியேசன், சமையல் எண்ணெய் வியாபாரிகள் சங்கம், டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், வெல்ல வியாபாரிகள் சங்கம், மாவட்ட பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சங்கம் என ஏழு அமைப்பினர் இணைந்து இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் கிளை பகுதியில் உள்ள கடைகளையும் இதே கால நேரத்தை கடைபிடிப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகமாக பரவி வரும் சூழலில் பாதுகாப்பு கருதி வரும் திங்கள் முதல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வணிகர் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தொற்று அதிகரித்து வருவதால் பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பெரியகடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி, தாமஸ் வீதி, வைசியாள் வீதி, தேர்முட்டி ஆகிய பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாகவும் இவை அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரையிலே செயல்படும் என்றார். இதில் கோயமுத்தூர் மளிகை வியாபாரிகள் சங்கம், தமிழக வியாபாரிகள் சம்மேளனம் (கடை வீதி கிளை), கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் டிஸ்டிரிபூயுட்டர்ஸ் அசோசியேசன், சமையல் எண்ணெய் வியாபாரிகள் சங்கம், டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், வெல்ல வியாபாரிகள் சங்கம், மாவட்ட பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சங்கம் என ஏழு அமைப்பினர் இணைந்து இந்த முடிவை எடுத்து உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் கிளை பகுதியில் உள்ள கடைகளையும் இதே கால நேரத்தை கடைபிடிப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.