கோவையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் சில்லறை மீன் மார்க்கெட் மூடல்!

கோவை: கோவையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் சில்லறை மீன் மார்க்கெட் மூடப்படுகிறது.


கோவை: கோவையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் சில்லறை மீன் மார்க்கெட் மூடப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் சமீப நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் முக கவசங்கள் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அவ்வாறு கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.



இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் சில்லறை மீன் மார்கெட்டை மக்கள் அதிகம் மீன் வாங்க வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூட முடிவெடுத்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், சில்லறை மீன் மார்க்கெட்டில் 68 கடைகள் இயங்கி வருவதாகவும் கேரளா, கன்னியாகுமரி, ராமேஸ்வரம்,

தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்து பெறப்பட்டு இங்கு சில்லறை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்தனர்.

தினசரி 50 கிலோ முதல் 100 கிலோ வரை இங்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மீன் விற்பனை இருக்கும் எனவும் மீன் வாங்க மக்கள் அதிகம் வரும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் நலன் கருதி விற்பனையை நிறுத்தி வைக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மற்ற நாட்களில் சமூக இடைவெளியை பின்பற்றி மீன்கள் வாங்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...