திருப்பூர்: இந்திய சீன எல்லையில் சீனா ராணுவம் அத்துமீறலை கண்டித்து திருப்பூரில் சீன கொடிகளை எரித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: இந்திய சீன எல்லையில் சீனா ராணுவம் அத்துமீறலை கண்டித்து திருப்பூரில் சீன கொடிகளை எரித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை கொலை செய்திருப்பதை கண்டித்து திருப்பூரில் மாநகராட்சி அருகே இந்து முன்னணியினர் சீனாவின் கொடிகளை எரித்தும், சீன பொருட்களை சாலையில் போட்டு உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரான ஹவில்தார் பழனியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், சீனாவிற்கு ஆதரவாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள திமுக இப்பிரச்சனையில் சீன அரசை கண்டிக்காமல் அரசியல் செய்து வருவதாகவும், சீனாவை எதிர்கொள்ள தேவையான பலத்தோடு இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும் இதற்காக பிரதமர் மோடிக்கு இந்து முன்னணி எப்போதும் துணையாக இருக்கும் எனவும், இந்திய ராணுவத்திற்கு உதவி தேவைப்பட்டால் இந்து முன்னணி களம் இறங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை கொலை செய்திருப்பதை கண்டித்து திருப்பூரில் மாநகராட்சி அருகே இந்து முன்னணியினர் சீனாவின் கொடிகளை எரித்தும், சீன பொருட்களை சாலையில் போட்டு உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரான ஹவில்தார் பழனியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், சீனாவிற்கு ஆதரவாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள திமுக இப்பிரச்சனையில் சீன அரசை கண்டிக்காமல் அரசியல் செய்து வருவதாகவும், சீனாவை எதிர்கொள்ள தேவையான பலத்தோடு இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும் இதற்காக பிரதமர் மோடிக்கு இந்து முன்னணி எப்போதும் துணையாக இருக்கும் எனவும், இந்திய ராணுவத்திற்கு உதவி தேவைப்பட்டால் இந்து முன்னணி களம் இறங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.