மேட்டுப்பாளையத்தில் சுறுக்கு கம்பியில் மாட்டி காயமடைந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுறுக்கு கம்பியில் மாட்டி காயமடைந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுறுக்கு கம்பியில் மாட்டி காயமடைந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று விவசாய தோட்டத்தினுள் படுகாயமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது.

சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சென்னாமலை கரடு பகுதியில் இருந்த அந்த சிறுத்தை மர்ம நபர்கள் வைத்த சுறுக்கு கம்பியில் மாட்டி வயிறு, மார்பு, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும், கோவையில் இருந்து சிறப்பு வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆண்டிபயாடிக், குளுக்கோஸ், வைட்டமின் என அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிறுத்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது வன ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இதையடுத்து, சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணமான சுறுக்கு கம்பிகளை வைத்தவர்கள் யார் என சிறுமுகை வனத்துறையினர் தோட்டம் தோட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...