கோவை: தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ஒரு அங்கமான தொழிலாளர் வீட்டு வசதி குழுவிற்கு தமிழக அரசால் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் ஒரு உறுப்பினராக வால்பாறை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வால்பாறை வீ அமீது அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை: தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ஒரு அங்கமான தொழிலாளர் வீட்டு வசதி குழுவிற்கு தமிழக அரசால் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் ஒரு உறுப்பினராக வால்பாறை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வால்பாறை வீ அமீது அறிவிக்கப்பட்டுள்ளார்.
இக்குழுவில், நீலகிரி மற்றும் சென்னையில் உள்ள தொழிற் சங்க தலைவர்கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இக்குழு தேயிலை தோட்டப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் நலன்கள், அடிப்படை வசதிகளான குடிநீர், வீட்டு வசதி, சுகாதாரம் பற்றி ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பும்.
தோட்டத் தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வால்பாறை அமீதுவை வால்பாறை பகுதியில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.