கோவை: வால்பாறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: வால்பாறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள சீதோஷ்ன நிலை, சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை போர்த்திய தேயிலை காடுகளை ரசிக்க தமிழகம், கேரளா, கர்நாடகா பாண்டிச்சேரி மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாவின் மூலம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைத்துத் தரக்கோரி வால்பாறை மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் பி.ஏ.பி வளாகத்தில் தாவரவியல் பூங்காவும், புதிய பேருந்து நிலையம் அருகில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். இதன் அடிப்படையில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது பற்றி கருத்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, படகு இல்லம் அமைக்கும் பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய வால்பாறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள சீதோஷ்ன நிலை, சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை போர்த்திய தேயிலை காடுகளை ரசிக்க தமிழகம், கேரளா, கர்நாடகா பாண்டிச்சேரி மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாவின் மூலம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைத்துத் தரக்கோரி வால்பாறை மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் பி.ஏ.பி வளாகத்தில் தாவரவியல் பூங்காவும், புதிய பேருந்து நிலையம் அருகில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். இதன் அடிப்படையில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது பற்றி கருத்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, படகு இல்லம் அமைக்கும் பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய வால்பாறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.