நீலகிரி: உதகையில் கடந்த 2017ம் ஆண்டு பெற்ற குழந்தையை தாய் கொன்ற வழக்கில் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
நீலகிரி: உதகையில் கடந்த 2017ம் ஆண்டு பெற்ற குழந்தையை தாய் கொன்ற வழக்கில் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சரஸ்வதி என்ற பெண்மணி தான் பெற்ற குழந்தையையே மரக் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பெண்மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இந்த வழக்கு உதகையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, தன் குழந்தையை மரக் கட்டையால் அடித்து கொலை செய்த தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து, குழந்தையை கொலை செய்த அப்பெண்ணை காவல்துறையினர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சரஸ்வதி என்ற பெண்மணி தான் பெற்ற குழந்தையையே மரக் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பெண்மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இந்த வழக்கு உதகையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, தன் குழந்தையை மரக் கட்டையால் அடித்து கொலை செய்த தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து, குழந்தையை கொலை செய்த அப்பெண்ணை காவல்துறையினர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.