நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக எட்டு பேருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பேருந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தேவையற்ற பயணங்களை மேற்கொள்வோர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக எட்டு பேருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பேருந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேவையற்ற பயணங்களை மேற்கொள்வோர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் இன்றைய நாள் வரை சுமார் 8 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் உதகை அருகே உள்ள குளிச்சோலை பகுதியில் ஐந்து பேரும் குன்னூர் வண்ணாரப்பேட்டை ஒருவரும் தைமலைப் பகுதியில் ஒருவரும் தும்மனட்டி பகுதியில் ஒருவரும் என மொத்தம் எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல, தற்போது அரசு ஓர் மண்டலத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் சென்று வரலாம் என்று கூறியதை பொது மக்கள் தவறாக எடுத்துக்கொண்டு சென்று வருகின்றனர் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சென்றுவர வேண்டும் எனவும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள கூடாது என்றார்.
மேலும், கொரோனா இல்லாத மாவட்டமாக நீலகிரி திகழ பொதுமக்களுடைய ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும், சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவது உறவினர்களை பார்க்கச் செல்வது என இதுபோன்ற பயணங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சுபநிகழ்ச்சிகளை நடத்துவோர் மற்றும் அதில் கலந்து கொள்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் இன்றைய நாள் வரை சுமார் 8 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் உதகை அருகே உள்ள குளிச்சோலை பகுதியில் ஐந்து பேரும் குன்னூர் வண்ணாரப்பேட்டை ஒருவரும் தைமலைப் பகுதியில் ஒருவரும் தும்மனட்டி பகுதியில் ஒருவரும் என மொத்தம் எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல, தற்போது அரசு ஓர் மண்டலத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் சென்று வரலாம் என்று கூறியதை பொது மக்கள் தவறாக எடுத்துக்கொண்டு சென்று வருகின்றனர் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சென்றுவர வேண்டும் எனவும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள கூடாது என்றார்.
மேலும், கொரோனா இல்லாத மாவட்டமாக நீலகிரி திகழ பொதுமக்களுடைய ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும், சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவது உறவினர்களை பார்க்கச் செல்வது என இதுபோன்ற பயணங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சுபநிகழ்ச்சிகளை நடத்துவோர் மற்றும் அதில் கலந்து கொள்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கடுமையாக எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.