கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

குறிப்பாக, கொரோனா தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்டுள்ள டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக கோவை வருபவர்கள் அதிகரித்துள்ளதால் கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில், கோவையில் இன்று ஒரே நாளில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் மரணமடைந்த ஆர்.ஜி.புதூரை சேர்ந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அரக்கோணத்திலிருந்து கோவை வந்த பீளமேட்டை சேர்ந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து கோவை வந்த சூலூரை சேர்ந்த 3 பேருக்கும், சூலூர் மற்றும் செல்வபுரத்தில் இருந்து உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல, மும்பையில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த செல்வபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து கோவை வந்த இடையர்பாளையம், பொள்ளாச்சி, ரேஸ்கோர்ஸ், என்ஜிஜிஓ காலணி, சோமையம்பாளையம், சங்கனூர் பகுதிகளை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், சிறுமுகை, வடவள்ளி, பிஎன்பாளையம், ஒண்டிபுதூர், போத்தனூர், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தலா ஒருவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் மொத்த ஆண்கள் 12, பெண்கள் 17 மற்றும் ஒரு சிறுமி, ஒரு சிறுவன் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...