கோவையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்களின் மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் - நா.கார்த்திக் எம்எல்ஏ

கோவை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கோவையில் உள்ள தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்களின் மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.


கோவை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கோவையில் உள்ள தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்களின் மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நா. கார்த்திக் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவையில் பல்லாயிரக் கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளது. ஏற்கனவே நலிவடைந்து, சிரமப்படுகிற, கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் முழுமையாக செயல்படவில்லை. இதனால் எந்த வித உற்பத்தி மற்றும் வருமானம் இன்றி, தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் .

இந்த நிலையில், கடந்த ஜூன் 3 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (மின்சார வாரியம்) சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை, அதற்கான தாமத (அபராதம்) கட்டணம் இன்றி செலுத்துவதற்கு ஜூன் 15 வரை கால நீட்டிப்பு செய்தும், ஜூன் 15-க்கு பிறகு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று அறிவித்தது.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நிறுவனங்கள் முழுமையாக செயல்படாமல் இருந்ததால் இந்த மூன்று மாதங்களுக்கான மின் கட்டணமாக மிகப் பெரிய தொகையை, ஜூன் 15ம் தேதிக்குள் செலுத்த முடியாத நிலையில் தொழிற்சாலை உரிமையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றுடன் காலக்கெடு முடிந்த நிலையில் இன்னும் மூன்று நாட்களில் நிலுவையில் உள்ள மொத்த மின் கட்டண தொகையையும் அபராதத்துடன் கட்ட வேண்டும் எனவும் இல்லாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த மாதத்திலிருந்துதான் தொழிற்சாலைகள் இயக்கத்திற்கு வந்துள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிப்பு என்றால், மீண்டும் தொழிற்சாலைகள் முடங்கி இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமே சிதைந்து கேள்விக்குறியாகி விடும்.

ஆகவே, இந்த பேரிடர் காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காததால், பெரும் நிதி நெருக்கடியில் உள்ள கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோவையில் உள்ள இந்த தொழிற்சாலைகளை கடுமையான சரிவிலிருந்து மீட்கும்படியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...