கோவை: கோவையில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய ஜெராக்ஸ் கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை: கோவையில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கிய ஜெராக்ஸ் கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் விருதுநகர் செல்வதற்காக சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சூலூர் ஜெராக்ஸ் என்ற கடையில் விண்ணப்பித்து இ பாஸ் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், விருதுநகரில் வாகன சோதனையின் போலீசார் ஈடுபட்டிருந்த போது இ-பாஸ் போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விருதுநகர் வருவாய் அதிகாரிகள் கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இயங்கி வந்த சூலூர் ஜெராக்ஸ் கடைக்கு சென்று வட்டாட்சியர் மீனா குமாரி ஆய்வு நடத்தினார்.

இதில் இ பாஸ் போலியாக தயாரித்து வழங்கப்படுவது விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், போலியாக இ பாஸ் வழங்கிய சூலூர் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பாலு மீது புகார் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் தலைமறைவான பாலுவை போலீசார் தேடி வருகின்றனர். கடைக்கு சீல் வைக்கப்பட்டது தெரியாமல் ஏராளமான வாகனங்கள் இ-பாஸ் வாங்குவதற்காக ஜெராக்ஸ் கடைக்கு வந்தவர்கள் கடை சீல் வைக்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றனர்.
இதையடுத்து, போலியான இ பாஸ் விவகாரம் தொடர்பாக சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் விருதுநகர் செல்வதற்காக சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சூலூர் ஜெராக்ஸ் என்ற கடையில் விண்ணப்பித்து இ பாஸ் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், விருதுநகரில் வாகன சோதனையின் போலீசார் ஈடுபட்டிருந்த போது இ-பாஸ் போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விருதுநகர் வருவாய் அதிகாரிகள் கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இயங்கி வந்த சூலூர் ஜெராக்ஸ் கடைக்கு சென்று வட்டாட்சியர் மீனா குமாரி ஆய்வு நடத்தினார்.
இதில் இ பாஸ் போலியாக தயாரித்து வழங்கப்படுவது விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், போலியாக இ பாஸ் வழங்கிய சூலூர் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பாலு மீது புகார் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் தலைமறைவான பாலுவை போலீசார் தேடி வருகின்றனர். கடைக்கு சீல் வைக்கப்பட்டது தெரியாமல் ஏராளமான வாகனங்கள் இ-பாஸ் வாங்குவதற்காக ஜெராக்ஸ் கடைக்கு வந்தவர்கள் கடை சீல் வைக்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றனர்.
இதையடுத்து, போலியான இ பாஸ் விவகாரம் தொடர்பாக சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.