அன்னூர் மக்களின் கனவு திட்டமான அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைக்க பூமி பூஜை..! சபாநாயகர் தனபால் துவக்கி வைத்தார்!

கோவை: அன்னூரில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு திட்டபணிகளை துவக்கி வைத்தார்.

கோவை: அன்னூரில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு திட்டப்பணிகளைத் துவக்கி வைத்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தரிசு நிலங்கள் பயன்பெறும் வகையில் குளம் குட்டைகளில் நீர் நிரப்பி விவசாயத்தை மேம்படுத்த அவிநாசி அத்திக்கடவு திட்டம் தமிழக அரசால் கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது.

காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து அன்னூர் வரை குழாய்கள் மூலம் பைப்புகள் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டமானது ஆண்டிற்கு 1.5டிம்.சி தண்ணீர் எடுத்து குளங்கள், குட்டைகள், ஏரிகளில் தண்ணீர் நிரப்பிட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறும் அன்னூர் பகுதியில் இன்று அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை குன்னத்தூரம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரும் அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

அன்னூர் மக்களின் கனவு திட்டமான அவிநாசி அத்திக்கடவு திட்டம் துவக்க நிகழ்ச்சி இப்பகுதியில் நடைபெற்றாலும் கொரோனா அச்சம் காரணமாக பெரிய அளவில் கூட்டம் கூட்டாமல் எளிய முறையில் சமூக இடைவெளி விட்டு இந்த பூஜை நடைபெற்றது.

இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது கோவை பகுதியில் மட்டும் 258 குளம் குட்டைகள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...