கோவை: கோவையில் கடந்தாண்டு புதிதாக துவங்கிய ஏழு செங்கல் சூளைகள் தொடர்ந்து இயங்க, வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
கோவை: கோவையில் கடந்தாண்டு புதிதாக துவங்கிய ஏழு செங்கல் சூளைகள் தொடர்ந்து இயங்க, வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
கோவை வடக்கு பகுதியில் உள்ள சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்குகின்றன.
இவை தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் எழுப்பினர். செங்கல் சூளைகளின் இயக்கத்தை தடை செய்ய கோரும் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, கோவை சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், செங்கல் சூளைகளில், ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வீரபாண்டி, சின்னதடாகம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு புதியதாக துவக்கப்பட்ட, ஏழு செங்கல் சூளைகள் இயங்க தடை விதித்தனர்.
புதிய செங்கல் சூளைகள் மீதான தடையால் ஏற்கனவே இயங்கி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை வடக்கு பகுதியில் உள்ள சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்குகின்றன.
இவை தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் எழுப்பினர். செங்கல் சூளைகளின் இயக்கத்தை தடை செய்ய கோரும் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, கோவை சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், செங்கல் சூளைகளில், ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வீரபாண்டி, சின்னதடாகம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு புதியதாக துவக்கப்பட்ட, ஏழு செங்கல் சூளைகள் இயங்க தடை விதித்தனர்.
புதிய செங்கல் சூளைகள் மீதான தடையால் ஏற்கனவே இயங்கி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.