கோவை: வால்பாறையில் விஷ வண்டு கடித்து வன ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையில் விஷ வண்டு கடித்து வன ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட ரயான் டிவிசன் பகுதியில் வனத்துறையைச் சார்ந்த வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அடர்ந்த வனப்பகுதியை கடக்கும் போது எதிர்பாராத விதமாக புதரில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் (கதண்டுகள்) பறந்து வந்து வனத்துறையினரை தாக்கிய போது வனக்காவலர்கள் தப்பி ஓடினர். ஆனால், விஷ வண்டுகள் தாக்கியதில் நாராயணன் (29) மற்றும் அரவிந்த் (27) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட ரயான் டிவிசன் பகுதியில் வனத்துறையைச் சார்ந்த வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அடர்ந்த வனப்பகுதியை கடக்கும் போது எதிர்பாராத விதமாக புதரில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் (கதண்டுகள்) பறந்து வந்து வனத்துறையினரை தாக்கிய போது வனக்காவலர்கள் தப்பி ஓடினர். ஆனால், விஷ வண்டுகள் தாக்கியதில் நாராயணன் (29) மற்றும் அரவிந்த் (27) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.