கோவை தென்னம்பாளையம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

கோவை: கோவை தென்னம்பாளையம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை தென்னம்பாளையம் பகுதியில் இளைஞரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் அடுத்த காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் மதன்குமார். ஆட்டோ ஓட்டுநரான மதன்குமார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணி அமைப்பிலிருந்து விலகி விஎச்பி அமைப்புக்கு சென்றுவிட்டார். இதனால் இந்து முன்னணி அமைப்பிலுள்ள சக்தி உட்பட மூன்று பேர் அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதன் குமாரின் குடியிருப்பு பகுதிக்கு வந்த சக்தி உட்பட நான்கு பேர் மதன்குமாரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் மதன்குமார் புகார் அளித்தார். இதனிடையே சக்தி கத்தியைக் காட்டியை மிரட்டி வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், சக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...