கோவையில் குடும்ப தகராறு காரணமாக காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து ஆண் தற்கொலை!

கோவை: கோவையில் குடும்பத்தகராறு காரணமாக காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து ஆண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் குடும்பத்தகராறு காரணமாக காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து ஆண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (35). இவர் இன்று வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக கிளம்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பிரேம்குமாரின் குடும்பத்தார் சந்தேகத்தின் அடிப்படையில் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்து கொண்டிருந்தனர். 

அப்போது, காவல் நிலையத்தில் இருந்த வாக்கி டாக்கியில் காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து TN66 S 6262 என்ற இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து தற்கொலையில் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சந்தேகமடைந்த போலீசாரும், பிரேம்குமாரின் உறவினர்களும் வந்து பார்த்தபோது தற்கொலையில் ஈடுபட்டவர் பிரேம்குமார் என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரேம்குமார் லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. 



அதேபோல, இவர் ஊரடங்கின் போது காரில் வைத்து மது விற்பனை செய்ததாக போலீசாரிடம் மாட்டிக் கொண்டதும், பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என விடுவிக்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது. 



இதையடுத்து, போலீசார் தற்கொலையில் ஈடுபட்ட பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...