கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய இருவர் லஞ்ச புகாரில் கைது, சிறையில் அடைப்பு..!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்து தொடர்புகள் அலுவலகத்தில் பணியாற்றிய இருவர் இன்று கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்து தொடர்புகள் அலுவலகத்தில் பணியாற்றிய இருவர் இன்று கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய வடமதுரை பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் நிலை உயர்ந்தபட்ட கண்காணிப்பாளராக பணியாற்றிய வந்தார். அதே அலுவலகத்தில் ராமநாதபுரம் பகுதியைப் சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரியின் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் .

இருவரும், பொதுமக்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல லட்ச ரூபாய் கணக்கில் பெற்று கொண்டு போலியான பணி நியமன ஆணைகளை தயார் செய்து கொடுத்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், போலீஸ் விசாரணையில் இவர்கள் இருவரும் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொதுமக்கள் முறையான அறிவிப்பின்றி தகுதித்தேர்வு என்று குறுக்கு வழியில் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினால் அதை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இவ்வாறு பணத்தை பெற்று அரசு வேலை வாங்கி தருவதாக பலர் ஏமாந்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. இது போல் பல புகார்கள் வருவதால் இது போல் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்படுவதாக அறிக்கை கொடுக்கபட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...