தெளிவான அறிக்கை கிடைக்கப்பெறும் வரை தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது - தொழில் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: தெளிவான அறிக்கை கிடைக்கப் பெறும் வரை தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று தொழில் அமைப்புகள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தெளிவான அறிக்கை கிடைக்கப் பெறும் வரை தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று தொழில் அமைப்புகள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



தொழில் நிறுவனங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு மின் கட்டணம் விதிக்கக் கூடாது எனவும் கட்டணம் செலுத்தாத தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு போசியா(Focia) இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து டேக்ட் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், கடந்த 6ம் தேதி மின்சார துறை அமைச்சரை சந்தித்து தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்றும், அடுத்த 3 மாதத்திற்கு மின்கட்டணம் ரத்து செய்ய கோரிக்கை வைத்தோம். இதேபோல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடமும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

இருவரும் முதலமைச்சரிடம் பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக கூறிய நிலையில், 15ம் தேதி மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில் முடங்கியுள்ள சூழலில் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் தொழில் நிறுவனங்கள் மின்கட்டணம் செலுத்த முடியாது எனவும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும், மின்கட்டணம் குறித்து தெளிவான முடிவு எடுக்கும் வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடமும் மின்வாரியத்திடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஏற்கனவே தொழில்கள் முடங்கி உள்ள நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், தொழில்கள் மேலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...