திருப்பூர்: திருப்பூரில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சிகரங்கள் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்கள் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சிகரங்கள் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்கள் சிறப்பாக நடைபெற்றது.
உலகம் முழுவதும் நேற்று இரத்ததான தினம் கொண்டாடப்பட்டது. இரத்ததானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறும்படம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், திருப்பூரில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சிகரங்கள் அறக்கட்டளை சார்பாக நேற்று நடைபெற்ற இரத்ததான முகாம்கள் மூலம்
131 யூனிட் இரத்தம் பெறப்பட்டது.
இதில் நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்களுடன் இணைந்து 15 வேலம்பாளையத்தில் நடத்திய இரத்ததான முகாமில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழுவினர் 57 யுனிட் இரத்தம் தானமாக பெற்றனர்.

அதேபோல, டிரீம் 20 பசுமை அமைப்புடன் இணைந்து சின்னச்சாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய இரத்ததான முகாமில் உடுமலை அரசு மருத்துவமனை குழுவினர் 74 யூனிட் இரத்தம் தானமாக பெற்றனர்.
இதையடுத்து, நேற்று நடந்த ரத்ததான முகாமில் பெறப்பட்ட 131 யூனிட் இரத்தம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.




உலகம் முழுவதும் நேற்று இரத்ததான தினம் கொண்டாடப்பட்டது. இரத்ததானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறும்படம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், திருப்பூரில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சிகரங்கள் அறக்கட்டளை சார்பாக நேற்று நடைபெற்ற இரத்ததான முகாம்கள் மூலம்
131 யூனிட் இரத்தம் பெறப்பட்டது.
இதில் நஞ்சப்பா பள்ளி முன்னாள் மாணவர்களுடன் இணைந்து 15 வேலம்பாளையத்தில் நடத்திய இரத்ததான முகாமில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழுவினர் 57 யுனிட் இரத்தம் தானமாக பெற்றனர்.
அதேபோல, டிரீம் 20 பசுமை அமைப்புடன் இணைந்து சின்னச்சாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய இரத்ததான முகாமில் உடுமலை அரசு மருத்துவமனை குழுவினர் 74 யூனிட் இரத்தம் தானமாக பெற்றனர்.
இதையடுத்து, நேற்று நடந்த ரத்ததான முகாமில் பெறப்பட்ட 131 யூனிட் இரத்தம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.