கோவையில் கொரோனா: இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 28 வயது இளைஞர் உயிரிழப்பு!
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 வயது இளைஞர் உயிரிழந்தார்.
கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் ராமர் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கோவை வந்துள்ளார்.
இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழந்தார். இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை இல்லாத காரணத்தால் உயிரிழந்த இளைஞரின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார். கொரோனா தொற்று காரணமாகத்தான் இவர் இறந்தாரா என அறிக்கைக்காக காத்திருப்பதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update 11 AM: Ramar Koil Street, RG PUDUR fumigated and isolated

