கோவை: கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கோவை: கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முக கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டும் என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தன. இதன்படி, கோவையில் முக கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இதுவரை, கோவை மாநகரின் கிழக்கு மண்டலத்தில் 2 ஆயிரத்து 700 பேரிடம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 30, மேற்கு மண்டலத்தில் 691 பேரிடம் இருந்து ரூ.69,100 ரூபாய், வடக்கு மண்டலத்தில் 637 பேரிடம் இருந்து ரூ.63 ஆயிரத்து 700 மற்றும் தெற்கு மண்டலத்தில் 314 பேரிடம் இருந்து ரூ.31 ஆயிரத்து 400, கோவை மத்திய மண்டலத்தில் 1,290 பேரிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 29 ஆயிரம் என 5 ஆயிரத்து 356 பேரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 35 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதே போல், கோவை நகராட்சி பகுதிகளில் ரூ.97 ஆயிரமும்,டவுன் பஞ்சாயத்துகளில் ரூ.61 ஆயிரமும், ஊராட்சிகளில் ரூ.13 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.7 லட்சத்து 7 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடரும் எனவும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முக கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டும் என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தன. இதன்படி, கோவையில் முக கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இதுவரை, கோவை மாநகரின் கிழக்கு மண்டலத்தில் 2 ஆயிரத்து 700 பேரிடம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 30, மேற்கு மண்டலத்தில் 691 பேரிடம் இருந்து ரூ.69,100 ரூபாய், வடக்கு மண்டலத்தில் 637 பேரிடம் இருந்து ரூ.63 ஆயிரத்து 700 மற்றும் தெற்கு மண்டலத்தில் 314 பேரிடம் இருந்து ரூ.31 ஆயிரத்து 400, கோவை மத்திய மண்டலத்தில் 1,290 பேரிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 29 ஆயிரம் என 5 ஆயிரத்து 356 பேரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 35 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதே போல், கோவை நகராட்சி பகுதிகளில் ரூ.97 ஆயிரமும்,டவுன் பஞ்சாயத்துகளில் ரூ.61 ஆயிரமும், ஊராட்சிகளில் ரூ.13 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.7 லட்சத்து 7 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடரும் எனவும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.