Update: கோவையில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கோவை: கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேர் உட்பட மேலும் சிலருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் மொத்தம் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேர் உட்பட மேலும் சிலருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் மொத்தம் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது அதி தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள இந்த வைரஸ் தொற்றின் தாக்கம், கடந்த நாட்களாக கோவையில் அதிகரித்து வருகிறது.

இப்படி இன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த 68 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 19 வயது பெண், விருதுநகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண், கோவை ரத்தினபுரியை சேர்ந்த 74 வயது பெண், தெக்கலூரை சேர்ந்த 42 வயது ஆண் ஆகிய 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல், டெல்லியில் இருந்து கோவை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 60 வயது ஆண், 26 வயது ஆண், 50 வயது பெண், 5 வயது பெண் குழந்தைக்கும், டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த ஈரோட்டை சேர்ந்த 47 வயது பெண், விருதுநகரை சேர்ந்த 21 பெண், சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த 31 வயது ஆண் ஆகிய 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் கோவையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் கோவையில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...