திருப்பூரில், காதல் ஜோடி நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த காதல் ஜோடியை கைது செய்து ஊத்துக்குளி போலிசார்..!

திருப்பூர்: திருப்பூரில், காதல் ஜோடி நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த காதல் ஜோடியை கைது செய்து ஊத்துக்குளி போலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில், காதல் ஜோடி நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த காதல் ஜோடியை கைது செய்து ஊத்துக்குளி போலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே குளத்தில் கொடூரமான முறையில் 8 வயது சிறுவன் நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தான், அவனது பிணத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள அஜித் என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஜித் பாலிடெக்னிக் மாணவர் என்பதும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பாலிடெக்னிக் மாணவரும், அவர் காதலியும் புத்தூர் பள்ளபாளையம் குளத்தில் சந்தித்துள்ளனர். குளத்தில் தண்ணீர் இல்லாததால் ஆங்காங்கே முட்புதர்கள் வளர்ந்து உள்ள நிலையில், இதனால் காதலர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது.

இதை அங்கு வந்த சிறுவன் பவனேஷ் பார்த்து விட்டதால் ஊரில் பெரியவர்களிடம் இதை சொல்லி விடுவான் என்ற பயத்தில் காதலர்கள் இருவரும் சேர்ந்து சிறுவனை பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து, அஜித் மற்றும் அவரது காதலி இருவரையும் கைது செய்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...