திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட அனைத்து கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபைகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்ட விடுதலை கட்சியின் சார்பில் கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் உள்ள சந்தன மலையில், ஒர் ஆண்டு காலமாக செயல்படாமல் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு கோபுரத்தை சரி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
"ஓவேலி பேரூராட்சி பகுதியில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் சுமார் 25 ஆயிரம் செல்போன் இணைப்புகளும் 200க்கும் மேற்பட்ட தரைவழி தொலைபேசி இணைப்புகளும் உள்ளன. இப்பகுதியில் சந்தன மலை என்னும் இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுக்கு மேலாக செல்போன் கோபுரம் செயல்படுவதில்லை, என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இதனால் பொதுமக்களுக்கு பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு கிடைப்பதில்லை எனவும், மேலும் மருத்துவ உதவிக்காக அழைப்பதற்குக் கூட முடியாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது, எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர், என தெரிவித்தனர்.
தற்போது கொரோனோ பெரும் தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி, உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ஆனால், செல்போன் இணைப்புகள் இல்லாததால் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது, என மனுவில் தெரிவித்தனர்.

மேலும், இணைய வழி பணி செய்பவர்கள் பணி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும், எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பிஎஸ்என்எல் உயர் மின் கோபுரத்தை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், செல்போன் உயர் மின் கோபுரம் சரி செய்யாத பட்சத்தில் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படுவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
"ஓவேலி பேரூராட்சி பகுதியில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் சுமார் 25 ஆயிரம் செல்போன் இணைப்புகளும் 200க்கும் மேற்பட்ட தரைவழி தொலைபேசி இணைப்புகளும் உள்ளன. இப்பகுதியில் சந்தன மலை என்னும் இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுக்கு மேலாக செல்போன் கோபுரம் செயல்படுவதில்லை, என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இதனால் பொதுமக்களுக்கு பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு கிடைப்பதில்லை எனவும், மேலும் மருத்துவ உதவிக்காக அழைப்பதற்குக் கூட முடியாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது, எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர், என தெரிவித்தனர்.
தற்போது கொரோனோ பெரும் தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி, உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ஆனால், செல்போன் இணைப்புகள் இல்லாததால் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது, என மனுவில் தெரிவித்தனர்.
மேலும், இணைய வழி பணி செய்பவர்கள் பணி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும், எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பிஎஸ்என்எல் உயர் மின் கோபுரத்தை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், செல்போன் உயர் மின் கோபுரம் சரி செய்யாத பட்சத்தில் மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படுவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.