குன்னூரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1200 ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டாக்ஸி ஓட்டுநர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகம்!

நீலகிரி: குன்னூரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சுமார் 1200 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், உள்ளிட்ட தொகுப்பினை குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு வழங்கினார்.

நீலகிரி: குன்னூரில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சுமார் 1200 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், உள்ளிட்ட தொகுப்பினை குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லாததால் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு தனது சொந்த செலவில் 1200 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.



குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த 50 நாட்களாக சுமார் 98 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்த செலவில் நிவாரண பொருட்கள் வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினர் இன்று குன்னூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர், டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சுமார் 1200 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், உள்ளிட்ட தொகுப்பினை 5 லாரிகள் மூலமாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...