நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே சட்டன் எஸ்டேட் பகுதியில் காலில் பிளாஸ்டிக் குழாய் மாட்டிக்கொண்டதால் உடல் மெலிந்த நிலையில் நடக்க முடியாமல் உணவு தேடித் திரியும் காட்டெருமைக்கு உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே சட்டன் எஸ்டேட் பகுதியில் காலில் பிளாஸ்டிக் குழாய் மாட்டிக்கொண்டதால் உடல் மெலிந்த நிலையில் நடக்க முடியாமல் உணவு தேடி திரியும் காட்டெருமைக்கு உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை சட்டன் எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டெருமைகள் அவ்வப்போது சாலைகளுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சாலை ஓரத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமையின் வலது பின்னங்காலில் பிளாஸ்டிக் குழாய் மாட்டிக் கொண்டிருந்தது.
இதன் காரணமாக கடுமையான வலியால் நொண்டிக் கொண்டே நடந்து செல்ல முடியாமல் உணவு எடுத்துக் கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டதையும் அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள், இந்த காட்டெருமைக்கு உரிய சிகிச்சை அளித்து, அதன் காலில் உள்ள பிளாஸ்டிக் குழாயினை அகற்றி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை சட்டன் எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டெருமைகள் அவ்வப்போது சாலைகளுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சாலை ஓரத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமையின் வலது பின்னங்காலில் பிளாஸ்டிக் குழாய் மாட்டிக் கொண்டிருந்தது.
இதன் காரணமாக கடுமையான வலியால் நொண்டிக் கொண்டே நடந்து செல்ல முடியாமல் உணவு எடுத்துக் கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டதையும் அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள், இந்த காட்டெருமைக்கு உரிய சிகிச்சை அளித்து, அதன் காலில் உள்ள பிளாஸ்டிக் குழாயினை அகற்றி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.