அரசாங்கம் தேவையான விதை, நாற்றுகளை இலவசமாக வழங்கினால் இலவச காய்கறி தன்னிறைவு தமிழகத்தை உருவாக்க முடியும் - காய்கறி பாட்டி நஞ்சம்மாள்

கோவை: அரசாங்கம் தேவையான விதை, நாற்றுகளை இலவசமாக வழங்கினால் இலவச காய்கறி தன்னிறைவு தமிழகத்தை உருவாக்க முடியும் என்று கோவையில் காய்கறி பாட்டி நஞ்சம்மாள் தெரிவித்தார்.

கோவை: அரசாங்கம் தேவையான விதை, நாற்றுகளை இலவசமாக வழங்கினால் இலவச காய்கறி தன்னிறைவு தமிழகத்தை உருவாக்க முடியும் என்று கோவையில் காய்கறி பாட்டி நஞ்சம்மாள் தெரிவித்தார்.

இலவச தற்சார்பு காய்கறி கிராம செயல்பாட்டாளர் நஞ்சம்மாள் பாட்டி கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

வீட்டு காய்கறி தோட்டங்கள் அமைப்பதில் இன்னும் நாம் வெற்றி பெறவில்லை எனவும் வீட்டு காய்கறி தோட்டங்கள் நாடு முழுவதும் வெற்றி பெற அரசாங்கம் தேவையான விதை மற்றும் நாற்றுகளை இலவசமாக வழங்கிட வேண்டும், 50 குடும்பங்கள் உள்ள ஊருக்கு ஒரு யூனிட் இயற்கை எருவை வழங்கிட வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி காய்கறி தோட்டம் அமைத்து தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

இதனை வலியுறுத்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாகவும் நஞ்சம்மாள் மகன் பாரதி சின்னசாமி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அங்கயற்கண்ணி ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து பேசிய பாரதி சின்னசாமி கூறுகையில், ஒரு கோடியே 14 லட்சம் சுய உதவி குழுக்கள் இருப்பதாகவும் இந்த குழுக்கள் முருங்கை, எலுமிச்சை போன்றவற்றை வளர்க்க அதிக இடம் தேவைப்படாது என்றார். வீட்டில் ஒரு பகுதியில், சாலை ஓரம் என இதனை பயிரிடலாம் என தெரிவித்த அவர், 100 முதல் 200 ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் உற்பத்தி செய்தால் மாதம் 5000 வரை சேமிக்க முடியும் என்றார். இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் காய்கறி தற்சார்பு திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் பெரும்பாலான மக்கள் பயன் அடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 12 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ரூ.72 ஆயிரம் கோடி வரை பெற முடியும் எனவும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 4 கோடி பேர் பணியாற்றி வருவதாகவும் வீட்டு தோட்டங்கள் அமைக்கப்பட்டால் தன்னிறைவற்ற கிராமங்கள் உருவாக்க முடியும் என்றார்.

இது குறித்து நஞ்சம்மாள் பாட்டி கூறுகையில், தான் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர் எனவும் பத்து வருட ஆய்வுகளுக்கு பின் தற்சார்பு காய்கறி தோட்ட திட்டத்தை அமல்படுத்தியதாக கூறிய அவர், தற்போது 30 கிராமங்களில் இது செயல்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.

மேலும், அதிக காய்கறிகள் பயிரிட்டாலும் வெற்றி கிடைப்பதில்லை, இதற்கு இடபற்றாகுறையும் ஒரு காரணம் என்றவர், தான் ஒரு நாற்றை அனைவருக்கும் தற்போது வரை இலவசமாக வழங்கி வருவதாக தெரிவித்தார். வேளாண் பல்கலை பரிந்துரை செய்யும் பயிர்கள் மட்டுமே இந்த தற்சார்பு காய்கறி திட்டத்தில் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...