கோவை: சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத்தொடங்கியதால் உதகை முதல் கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேட்டுப்பாளையம் வரை மட்டுமே இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, தினமும் 7 பேருந்துகள் மட்டுமே உதகையில் இருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத்தொடங்கியதால் உதகை முதல் கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேட்டுப்பாளையம் வரை மட்டுமே இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, தினமும் 7 பேருந்துகள் மட்டுமே உதகையில் இருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.
தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில், கோவை மண்டலத்தில் கோவையிலிருந்து உதகைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துகளில், பயணிகள் என்ற பெயரில் பல்வேறு காரணங்களை கூறி சுற்றுலா பயணிகள் உதகைக்கு அதிகளவில் வரத் தொடங்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் கோவை - உதகை இடையிலான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்தது. தொழிலாளர்களை மட்டும் ஏற்றி வருவதற்காக தினமும் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஏழு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாகவும், கூட்டத்ததைப் பொருத்து 32 முதல் 34 இருக்கைகளுடன் பேருந்துகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்புடன் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.
தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில், கோவை மண்டலத்தில் கோவையிலிருந்து உதகைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துகளில், பயணிகள் என்ற பெயரில் பல்வேறு காரணங்களை கூறி சுற்றுலா பயணிகள் உதகைக்கு அதிகளவில் வரத் தொடங்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் கோவை - உதகை இடையிலான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்தது. தொழிலாளர்களை மட்டும் ஏற்றி வருவதற்காக தினமும் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ஏழு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாகவும், கூட்டத்ததைப் பொருத்து 32 முதல் 34 இருக்கைகளுடன் பேருந்துகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்புடன் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.