கோவை அரசு மருத்துவமனையில் டெக்னிசியனாக பணியாற்றி வந்த 27 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிசியோதெரபி வார்டு மூடப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 27 வயது டெக்னிசியன் பணியாற்றி வந்தார். மருத்துவ விடுப்பில் விழுப்புரத்தில் உள்ள கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்று விட்டு, கோவை திரும்பியுள்ளார்.
ஒரு வார காலம் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்த பின்னர் பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிசியோதெரபி வார்டு மூடப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 14 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.