கோவை: மேட்டுப்பாளையத்தில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் நுழைந்து வீட்டின் சுற்றுச் சுவரை இடித்து அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் நள்ளிரவில் குடியிருப்புக்குள் நுழைந்து வீட்டின் சுற்றுச் சுவரை இடித்து அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் காட்டுயானை தொடர்ந்து கிராமங்களுக்கு அருகே உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
தேக்கம்பட்டி வனப்பகுதியில் இருந்து தாசம்பாளையம், குரும்பனூர் போன்ற பகுதிகளுக்குள் நுழையும் அந்த காட்டுயானை அங்குள்ள விவசாய பயிர்களை இரவு முழுவதும் மேய்ந்து கொண்டு, பின்னர் அதிகாலை நேரம் காட்டுக்குள் செல்வது நடந்து வருகிறது.
இது குறித்து ஊர் மக்கள் வனத்துறைக்கு அளித்த தொடர் புகாரினை தொடர்ந்து வனத்துறை அந்த யானையை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக விளைநிலங்களுக்குள் மட்டுமே சென்று வந்த அந்த யானை, இன்று கிராமத்திற்குள் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து அங்கும் இங்கும் சுற்றியதுடன் வீடுகளுக்கு உள்ளும் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

இதனிடையே, தாசம்பாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் நுழைந்த போது வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால், அந்த யானை குடியிருப்புக்குள் நுழைந்து அங்கும் இங்குமாக ஓடியது.

அப்போது ஓரு வீட்டின் சுற்று சுவரை இடித்து அதனை தாண்டி சென்றதுடன் ஊரின் மத்தியில் புதியதாக கட்டிக்கொண்டிருந்த வீட்டிக்குள் நுழைந்து உள்ளேயும் சென்றது.
இதனை கண்டு பீதியடைந்த அந்த மக்கள் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக அந்த யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், அந்த ஒற்றை ஆண் காட்டுயானைக்கு ஒரு கண்ணில் குறைபாடு உள்ளதால் அந்த யானை இவ்வாறு நடந்துகொள்வதாக தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் காட்டுயானை தொடர்ந்து கிராமங்களுக்கு அருகே உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
தேக்கம்பட்டி வனப்பகுதியில் இருந்து தாசம்பாளையம், குரும்பனூர் போன்ற பகுதிகளுக்குள் நுழையும் அந்த காட்டுயானை அங்குள்ள விவசாய பயிர்களை இரவு முழுவதும் மேய்ந்து கொண்டு, பின்னர் அதிகாலை நேரம் காட்டுக்குள் செல்வது நடந்து வருகிறது.
இது குறித்து ஊர் மக்கள் வனத்துறைக்கு அளித்த தொடர் புகாரினை தொடர்ந்து வனத்துறை அந்த யானையை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக விளைநிலங்களுக்குள் மட்டுமே சென்று வந்த அந்த யானை, இன்று கிராமத்திற்குள் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து அங்கும் இங்கும் சுற்றியதுடன் வீடுகளுக்கு உள்ளும் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
இதனிடையே, தாசம்பாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் நுழைந்த போது வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால், அந்த யானை குடியிருப்புக்குள் நுழைந்து அங்கும் இங்குமாக ஓடியது.
அப்போது ஓரு வீட்டின் சுற்று சுவரை இடித்து அதனை தாண்டி சென்றதுடன் ஊரின் மத்தியில் புதியதாக கட்டிக்கொண்டிருந்த வீட்டிக்குள் நுழைந்து உள்ளேயும் சென்றது.
இதனை கண்டு பீதியடைந்த அந்த மக்கள் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக அந்த யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், அந்த ஒற்றை ஆண் காட்டுயானைக்கு ஒரு கண்ணில் குறைபாடு உள்ளதால் அந்த யானை இவ்வாறு நடந்துகொள்வதாக தெரிவித்தனர்.