கோவை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று வால்பாறையில் 5 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
இதேபோல, சோலையார் அணை பகுதியில் 14 மி,மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சின்னகல்லாரில் 7 மி.மீட்டர் மழையும், நீரார் அணையில் 6 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில், வானம் மேகமூட்டத்துடன் உள்ளது.

இதன் காரணமாக கூழாங்கல் ஆறு நடுமலை ஆறு மற்றும் சிற்றோடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 165 அடி உயரமுள்ள சோலையார் அணையில் இன்று காலை நிலவரப்படி 48.12 அடி நீர் உள்ளது. அணைக்கு 75 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை.
அதேபோல, மிதமான மழை காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று வால்பாறையில் 5 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
இதேபோல, சோலையார் அணை பகுதியில் 14 மி,மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சின்னகல்லாரில் 7 மி.மீட்டர் மழையும், நீரார் அணையில் 6 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில், வானம் மேகமூட்டத்துடன் உள்ளது.
இதன் காரணமாக கூழாங்கல் ஆறு நடுமலை ஆறு மற்றும் சிற்றோடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 165 அடி உயரமுள்ள சோலையார் அணையில் இன்று காலை நிலவரப்படி 48.12 அடி நீர் உள்ளது. அணைக்கு 75 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை.
அதேபோல, மிதமான மழை காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.