கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் டாக்டர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் டாக்டர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
முன்னதாக அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வால்பாறை முன்னாள் ஒன்றிய செயலாளர் கோழிக்கடை கணேசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவரும் ஒன்றிய செயலாளருமான கோழிக்கடை கணேசன் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.