நீலகிரி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன் நீலகிரி எம்பி ஆ ராசா அடிக்கடி உதகை வந்து அவர் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வந்தார்.
நீலகிரி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன் நீலகிரி எம்பி ஆ ராசா அடிக்கடி உதகை வந்து அவர் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வந்தார்.
இந்த நிலையில், கொரோனா வேகமாக பரவியதையடுத்து நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, வெளியூர்வாசிகள் யாரும் அனுமதிக்கபடவில்லை. இந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் தளர்வுகள் அறிவிக்க பட்டதையடுத்து, நீலகிரி மாவட்ட எம்பி மற்றும் முன்னால் மத்திய அமைச்சருமானா ஆ.ராசா நீலகிரி இ-பாஸ் பெற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கபட்டது. பின்னர், அங்கிருந்து கார் மூலம் உதகை வந்த ஆ.ராசா, உதகை ஹில் பங்க்கில் உள்ள தனது வீட்டிற்கு வந்து அலுவலகம் செல்லாமல் நேராக பின்பக்கம் வழியாக சென்று ஒரு தனி அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

நீலகிரி எம்.பி ராசா, சென்னையிலிருந்து உதகை வந்துள்ளதால், அவர் 7 தினங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.