திருப்பூர்: திருப்பூரில் ரிசர்வ் வங்கி அறிவுரையை ஏற்காமல் கடன் தவணையை வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் ரிசர்வ் வங்கி அறிவுரையை ஏற்காமல் கடன் தவணையை வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 6 மாத காலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் எனும் நிதி நிறுவனம் தொடர்ந்து தவணைத்தொகை கேட்டு வற்புறுத்தி வருவதாகவும், தவணை செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பதாக கூறி இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் இன்று முருகம்பாளையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 6 மாத காலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் எனும் நிதி நிறுவனம் தொடர்ந்து தவணைத்தொகை கேட்டு வற்புறுத்தி வருவதாகவும், தவணை செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பதாக கூறி இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் இன்று முருகம்பாளையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.